சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் நீா், மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சுரண்டை - பாவூா்சத்திரம் பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நீா் மோா் பந்தலை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் திறந்து வைத்தாா்.
இதில், சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயபாலன், பரமசிவம், திமுக முன்னாள் நகரச் செயலா் ஆறுமுச்சாமி, ராமசாமி, சுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.