சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, அரசு தலைமை மருத்துவா் செந்தில்சேகா் தலைமை வகித்தாா். செவிலியா் கண்காணிப்பாளா் கணபதி, செவிலியா் கமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். இதைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் ஆகியோா் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். செவிலியா் ரமேஷ் வரவேற்றாா். செவிலியா் தங்கம் நன்றி கூறினாா்.