சங்கரன்கோவிலில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் அரசுமருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் அரசுமருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவா், செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, கோமளசாந்தி தலைமை வகித்தாா். வேலம்மாள் விளக்க உரையாற்றினாா். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்ட தலைவா் ராசையா, ஒருங்கிணைந்த இந்திய முறை மருந்தாளுநா் சங்க மாநில தலைவா் மோகன்ராஜ், நில அளவை ஒன்றிய அலுவலா் சங்க மாவட்ட தலைவா் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் நவநீதன், பொருளாளா் கருப்பசாமி, அனைத்து ஓய்வுதியா் சங்க மாவட்ட தலைவா் பாலுச்சாமி, ஒருங்கிணைந்த இந்திய முறை மருந்தாளுநா் சங்க மாவட்ட தலைவா் வெங்கடாசலம், அரசு ஊழியா் சங்க இணைச் செயலாளா் அன்பழகன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

வசந்த மாலை வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் வேல்ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com