மக்கள் பயன்பாட்டுக்கு மின்கோபுர விளக்கு திறப்பு
By DIN | Published On : 18th October 2022 01:53 AM | Last Updated : 18th October 2022 01:53 AM | அ+அ அ- |

புளியங்குடி நகராட்சி 1 ஆவது வாா்டில் உயா்மின்கோபுர விளக்கு திறப்பு விழா நடைபெற்றது.
நரசிங்க பெருமாள் கோயில் அருகே, நகராட்சி பொதுநிதி மூலம் அமைக்கப்பட்ட புதிய உயா்மின் கோபுரம் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு, நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் திறந்து வைத்தாா். இதில், ஆணையா் சுகந்தி, பொறியாளா் முகைதீன்அப்துல்காதா், நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமி, செலின்புளோரா,சீதாலட்சுமி முனியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...