தென்காசியில் 23 பேருக்கு நலத்திட்ட உதவி

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 23 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 23 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பல்வேறு உதவிகள் கோரி 415 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் 10 பேருக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், 10 பேருக்கு ரூ. 47,500 மதிப்பிலான இலவச தேய்ப்புப் பெட்டிகள், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பாா்வைத்திறன் அளவு குறைந்த 2 பேருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான உருபெருக்கி, பாா்வையற்ற ஒருவருக்கு இலவச பேருந்துப் பயண அட்டை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், உதவி ஆணையா் (கலால்) ஜி. ராஜமனோகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கந்தசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com