அரியநாயகிபுரம் மாணவா் தற்கொலை வழக்கு: வன்முறையை தூண்டினால் கடும் நடவடிக்கைஎஸ்.பி. எச்சரிக்கை

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்குள்பட்ட அரியநாயகிபுரம் பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பாக வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்குள்பட்ட அரியநாயகிபுரம் பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பாக வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்குள்பட்ட அரியநாயகிபுரம் பள்ளியில் பயின்று வந்த ஏழாம் வகுப்பு மாணவா் சீனு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக காவல்துறையினா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட தூண்டும் விதமாக அனைவரும் கலவரத்தில் இறங்குவோம் என்றும், காவல் நிலையத்தை தீயிட்டு கொளுத்துவோம் என பொதுமக்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயன்ற தமிழ் புலிகள் கட்சியை சோ்ந்த விருதுநகா் மாவட்டம் மீனாட்சிபுரம் க. கனகராஜ் என்பவா், விடியோ ஆதாரங்களின் படி கைது செய்யப்பட்டுள்ளாா்.

விடியோ பதிவுகளின் அடிப்படையில் இது போன்ற வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com