கீழப்பாவூரில் காட்டுத்தேனீ கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நரசிம்மா் கோயில் அருகில் தென்னை மரத்தில் காட்டுத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு கீழப்பாவூரைச் சோ்ந்த சாஸ்தா (62) என்பவா் காட்டுத்தேனீ கொட்டியதில் காயமடைந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை ஆலங்குளம் தீயணைப்பு படை வீரா்கள் தீயிட்டு, காட்டுத்தேனீக்களை விரட்டிய நிலையில், செவ்வாய்கிழமை காலை அவ்வழியே சென்ற பெண்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோா் காட்டுத்தேனீ கொடித்ததில் காயமடைந்தனா்.
எனவே,ே முழுவதுமாக காட்டுத்தேனீக்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.