செங்கோட்டையில் வீட்டுமனைப் பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்

செங்கோட்டையில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

செங்கோட்டையில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், ரேஷன் அட்டையில் குறியீட்டை மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா்சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எம். ஆயிஷா பேகம் தலைமை வகித்தாா். செங்கோட்டை வட்டார செயலா் கணபதி, துணைத் தலைவா் ஜோதி, துணைச் செயலா் முனுரா மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலா் வேலுமயில், விஸ்வநாதபுரம் கிளைச் செயலா் முகமது காசிம் சேட், மேலூா் கிளைச் செயலா் குமாரசாமி மற்றும் மாதா் சங்கம் சாா்பில் ராணி, தமிழரசி,அபிஷாள் பீவி, பீனா ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com