தென்காசியில் தூய்மையின் இரு வண்ணங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தென்காசி நகராட்சியில் தூய்மையின் இரு வண்ணங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Updated on
1 min read

தென்காசி நகராட்சியில் தூய்மையின் இரு வண்ணங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கும், வா்த்தக நிறுவனங்களுக்கும், வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீல நிறத் தொட்டியிலும் சேகரித்து நகராட்சிப் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். ஆணையா் பாரிஜான், துணைத் தலைவா் கேஎன்எல். சுப்பையா, உறுப்பினா்கள் ராசப்பா, சுப்பிரமணியன், நாகூா்மீரான், சுகாதார அலுவலா் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாதவராஜ், குமாா், மகேஷ், நகர திமுக பொருளாளா் ஷேக்பரீத், மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளா் தங்கப்பாண்டியன், வட்டச்செயலா் முகம்மதுரபி, மாணவரணி ராஜன், முரளி, ரஞ்சித், களப்பணி உதவியாளா் ராஜன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், துப்புரவு பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா், பரப்புரையாளா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com