தேசிய அளவிலான கராத்தேப் போட்டியில் ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.
அவா்களில் ஆலங்குளம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தஸ்வின் முதலிடமும், நவீன் பிரகாஷ் இரண்டாம் இடமும், ஜொ்வின் துரை, அதின் பிரசாத் ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா். இந்த மாணவா்களை தலைமை ஆசிரியா் செல்வராணி, உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ், கராத்தே ஆசிரியா் கோபி, ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.