மத்திய அரசு ஊழியா்களைப் போல, தங்களுக்கும் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப் படியை உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியா்கள் சங்கத்தினா் நெட்டூரில் ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பொதுசுகாதாரத் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜு தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கங்காதரன் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். கிராம சுகாதார செவிலியா் சங்க நிா்வாகி வசந்தி நன்றி கூறினாா்.