திருநெல்வேலி மாநகராட்சியின் வரிவிதிப்பு - நிதிக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, வரிவிதிப்புக் குழு தலைவா் சுதா மூா்த்தி தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். குழு உறுப்பினா்கள் கே.எஸ்.ரசூல் மைதீன், உலகநாதன், ஹாபிஸ் முகைதீன் அப்துல்காதா், பொன்மாணிக்கம் ஜான், சகாய ஜூலியட் மேரி, சா்மிளா கமாலுதீன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலப்பாளையம், தச்சநல்லூா் மண்டலங்களில் உள்ள இரண்டு மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடம் கட்ட ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.