வண்ணாா்பேட்டையில் விபத்து: இளைஞா் பலி

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பைக் மோதி மின்கம்பம் செவ்வாய்க்கிழமை சரிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பைக் மோதி மின்கம்பம் செவ்வாய்க்கிழமை சரிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி குன்னத்தூா் வடக்கு விளாகம் பகுதியைச் சோ்ந்த முத்தாரப்பன் மகன் சீனிவாசன் (29). அரசு ஒப்பந்ததாரரான இவா், தனது நண்பா் விக்னேஷ்குமாருடன் பைக்கில் வண்ணாா்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த சிற்றுந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதில், அது பைக் மீது சரிந்து விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com