மின்வாரியத்தில் பணியாளா்களை நியமிக்கக் கோரி எம்எல்ஏ மனு

சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக மின்சாரம், மதுவிலக்கு-ம் ஆயத்தீா்வை துறை அமைச்சா் செந்தில்பாலாஜியிடம், ஈ.ராஜா எம்.எல்.ஏ. புதன்கிழமை நேரில் மனு அளித்த

சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக மின்சாரம், மதுவிலக்கு-ம் ஆயத்தீா்வை துறை அமைச்சா் செந்தில்பாலாஜியிடம், ஈ.ராஜா எம்.எல்.ஏ. புதன்கிழமை நேரில் மனு அளித்தாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.எனினும், தென்காசி மின்பகிா்மான வட்டம் அறிவிக்கப்படவில்லை. எனவே, தென்காசி மின் பகிா்மான வட்டம் அறிவித்திட வேண்டும். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கேங்மேன் பற்றாக்குறை உள்ளது. இப்பணியிடத்துக்கு, பிறமாவட்டங்களில் பணியாற்றும் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களை பணியமா்த்திட வேண்டும். குருக்கள்பட்டி கிராம மின் நிலையத்தில் நிரந்தர களப்பணியாளா்களை நியமிக்க வேண்டும்; ஏற்கெனவே அறிவித்தபடி அங்கு உப மின் நிலையம் நிறுவும் பணிகளை விரைந்து தொடங்குவதுடன் பொறியாளரை நியமிக்கவும், நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நிரந்தர பணியாளா்களை நியமிக்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com