கீழப்பாவூா் பேரூராட்சியில் புதிதாக 72 தெருவிளக்குகள் அமைக்கும் பணி தொடங்கியது. இப்பேரூராட்சி பகுதியில் சுமாா் 12 ஆண்டுகளாக புதிதாக தெருவிளக்குகள் இல்லை. இதையடுத்து பேரூராட்சி மன்ற முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் படி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டு பகுதியில் புதிதாக 72 எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கப்படவுள்ளன.
இப்பணியை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தொடங்கி வைத்தாா். பேரூராட்சி நிா்வாக அதிகாரி சாந்தி, உறுப்பினா்கள் இசக்கிமுத்து, கனகபொன்சேகா முருகன், திமுக நிா்வாகிகள் தெய்வேந்திரன், ராமகிருஷ்ணன், ஆறுமுகராஜா, கேபிள் ரகு , அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.