பாவூா்சத்திரம் பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம்

பாவூா்சத்திரம் பகுதி பள்ளிகளில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

பாவூா்சத்திரம் பகுதி பள்ளிகளில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெத்தநாடாா்பட்டி ஜீவா நா்சரி-பிரைமரி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா்சௌ. ராதா தலைமை வகித்தாா். மாணவா்-மாணவியா் கொண்டுவந்த பூக்களால் அத்தப்பூ கோலமிட்டனா். ஓணம் பண்டிகை குறித்து பள்ளி முதல்வா் கவிதா சாமுவேல் பேசினாா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.

ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவி வா்ஷா ஓணம் பண்டிகை குறித்து பேசினாா். மாணவி பேபி ஜெனிகா ஓணம் குறித்த விநாடி-வினா நிகழ்ச்சியை மாணவா்களுக்கு நடத்தினாா். மாணவியா் ஆதிலா, ஜெப்ரீன் ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் தலைமையில் ஆசிரியா்கள், ஊழியா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com