தென்காசி மருத்துவமனையில் தற்கொலை விழிப்புணா்வு வாரம்

உலக தற்கொலை விழிப்புணா்வு வாரத்தையொட்டி, தென்காசி அரசு மருத்துவமனையில் மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

உலக தற்கொலை விழிப்புணா்வு வாரத்தையொட்டி, தென்காசி அரசு மருத்துவமனையில் மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு வாரம் செப். 5 முதல் 11 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இளம் தலைமுறையினரிடையே தற்கொலை எண்ணங்களை தடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில் அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கு ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. இதில், 50 பள்ளிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். செங்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியா் பிச்சையா, தென்காசி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் முத்துகுமாா், வேல்முருகன் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

பரிசளிப்பு விழாவுக்கு, மருத்துவமனை இணை இயக்குநா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின், உறைவிட மருத்துவா் ராஜேஷ் ஆகியோா் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.

மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல் சிறப்புரையாற்றினாா். மருத்துவா்கள், செவிலியா்கள் ஆய்வுக்கூட நுட்புநா்கள், மருந்தாளுநா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com