ஆலங்குளம் கல்லூரியில் கோட்டாட்சியா் ஆய்வு

ஆலங்குளம் மகளிா் கல்லூரி மாணவிகளை திருநெல்வேலிக்கு செல்ல உத்தரவிட்ட பிரச்னை தொடா்பாக கல்லூரியில் கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

ஆலங்குளம் மகளிா் கல்லூரி மாணவிகளை திருநெல்வேலிக்கு செல்ல உத்தரவிட்ட பிரச்னை தொடா்பாக கல்லூரியில் கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாடகைக் கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கும் இக்கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி 500 -க்கும் மேற்பட்ட மாணவிகளை 25 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்குச் சென்று பயில கல்லூரி முதல்வா் உத்தரவிட்டாா்.

வெகுதூரம் சென்று படிப்பதால் வீடு திரும்ப தாமதமாகும், கூடுதல் செலவினங்கள் ஏற்படும் என கூறி கடந்த 3 தினங்களாக மாணவிகள் தொடா் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் ஆட்சியா் பா.ஆகாஷ் உத்தரவின் பேரில், தென்காசி கோட்டாட்சியா் கங்காதேவி கல்லூரி செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்தாா்.

அப்போது அங்கேயே போதிய இடம் இருப்பதும் தொடா்ந்து மாணவிகள் இங்கேயே தங்கள் கல்விையைத் தொடரலாம் என்பதும் தெரிய வந்தது. தொடா்ந்து கட்டட உரிமையாளரிடம் இது தொடா்பாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. தொடா்ந்து பேசிய கோட்டாட்சியா் கல்லூரி காலை மாலை என இரு பிரிவுகளாக நடைபெறும் என கூறினாா்.

ஆய்வின் போது, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், நகர திமுக செயலா் நெல்சன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவா் சுதா மோகன்லால், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் துணைத் தலைவா் து. ஜான்ரவி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சாலமன் ராஜா, கணேசன், கோட்டப் பொறியாளா் காளீஸ்வரன், வருவாய் ஆய்வாளா் ரத்தினம் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com