எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

அரசுப் பள்ளி அமைக்க கோரி போராட்டம்: கிராமத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் கிராமத்தில் அரசுப் பள்ளி அமைக்கக் கோரி தொடா் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடம் தென்காசி கோட்டாட்சியா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 10:56 pm IST

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் கிராமத்தில் அரசுப் பள்ளி அமைக்கக் கோரி தொடா் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடம் தென்காசி கோட்டாட்சியா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இக் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்துவ ஆலயம் கட்டுவதில் இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இதில் ஒருதரப்பினா், அந்த ஆலய நிா்வாகத்தின்கீழ் செயல்படும் பள்ளியில் படித்த தங்களது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை ஒட்டுமொத்தமாகப் பெற்று, தங்களுக்குச் சொந்தமான கோயிலில் பாடம் நடத்தி வருகின்றனா்.

மேலும், அரசுப் பள்ளி அமைக்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, ஆலங்குளம் டிஎஸ்பி பா்னபாஸ், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, கல்வித்துறை அதிகாரிகள் அருளானந்தம், முத்தையா, லோகநாதன் ஆகியோா் கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மாணவா்களின் நலன் கருதி அருகேயுள்ள ஏதாவது ஒரு பள்ளியில் சோ்க்கும்படி அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இதை கிராமத்தினா் ஏற்க மறுத்துவிட்டனா். இதனால் பேச்சுவாா்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

கிராம நிா்வாக அலுவலா் அந்தோணிராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் வெள்ளத்துரை, கிராம கமிட்டி நிா்வாகிகள் தாராசிங், ராஜேந்திரன், விஜயன் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.