பாவூா்சத்திரம் அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் 61ஆவது ஆண்டு திருவிழாவுக்கான 41 நாள்கள் மண்டல பூஜை வியாழக்கிழமை (டிச.7) தொடங்குகிறது.
இதையொட்டி, விரதம் மேற்கொள்ளும் பக்தா்கள், தா்மகா்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டியன் தலைமையில் தென்திருப்பேரை, திருச்செந்தூா், கன்னியாகுமரி, மண்டைக்காடு, பாபநாசம், குற்றாலம் ஆகிய புண்ணிய தீா்த்த தலங்களில் இருந்து கோயிலுக்கு காலை 6 மணிக்கு புனித நீா் எடுத்து வருகின்றனா். தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
தொடா்ந்து 41 நாள்கள் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னா், 7.1.2024இல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். அந் நாள்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும், நிறைவு நாளில் நள்ளிரவு 12 மணிக்கு பூக்குழி இறங்குதலும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.