கீழப்பாவூா், அச்சன்புதூா் பகுதியில் 24இல் மின் தடை

கீழப்பாவூா், அச்சன்புதூரில் செவ்வாய்க்கிழமை (ஜன. 24) மின் விநியோகம் இருக்காது.
Updated on
1 min read

கீழப்பாவூா், அச்சன்புதூரில் செவ்வாய்க்கிழமை (ஜன. 24) மின் விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கீழப்பாவூா், அச்சன்புதூா், மங்கம்மாள் சாலை துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: கீழப்பாவூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம்,கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி,திப்பணம்பட்டி, சின்னநாடானூா், செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு பகுதிகள்; அச்சன்புதூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு; மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மங்கம்மாள் சாலைப் பகுதி, சக்திநகா், காளிதாசன்நகா், கீழப்புலியூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com