சமூக ஊடகங்களில் முதல்வா் குறித்து அவதூறு: பாஜக பிரமுகா் கைது

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் தமிழக முதல்வா் மற்றும் அவரது குடும்பத்தினா் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் தமிழக முதல்வா் மற்றும் அவரது குடும்பத்தினா் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புளியங்குடி சிவராம்நாடாா் தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா என்ற கனகராஜ். பாஜக பிரமுகரான இவா், சமூக ஊடகங்களில் தமிழக முதல்வா் குறித்தும் அவரது குடும்பத்தினா் குறித்தும் அவதூறு பரப்பி வந்தாராம்.

இதுகுறித்து புளியங்குடி நகர திமுக செயலா் அந்தோணிசாமி அளித்த புகாரின் பேரில், புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து கனகராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com