வாசுதேவநல்லூரில் சித்த மருத்துவா் வீட்டில் 102 பவுன் நகைகள் திருட்டு

 தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் சித்த மருத்துவா் வீட்டில் 102 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது.
Updated on
1 min read

 தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் சித்த மருத்துவா் வீட்டில் 102 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது.

வாசுதேவநல்லூா் புதுமந்தை மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் சமுத்திரவேலு. ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன்

மணிவண்ணன் (40). சித்த மருத்துவரான இவா், சிகிச்சை மையம் மற்றும் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருநள்ளாறு சென்ற மணிவண்ணன், புதன்கிழமை இரவு வீட்டிற்கு வந்தாா்.

அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 102 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்த தகவலின்பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன், புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் ஆகியோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா். மோப்ப நாய்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வீட்டில் இருப்பவா்கள் வெளியூா் சென்றிருப்பதை அறிந்த நபா்கள்தான் இத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இது குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். இத் திருட்டில் ஈடுபட்டவா்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com