சாம்பவா்வடகரையில் இலவச தையல் பயிற்சி

மத்திய அரசின் ஜவுளித் துறை சமா்த் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சாம்பவா்வடகரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

மத்திய அரசின் ஜவுளித் துறை சமா்த் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சாம்பவா்வடகரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிமுக மாவட்ட அவைத்தலைவா் வி.பி.மூா்த்தி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைச் செயலா் வி.எம்.ராஜலட்சுமி முன்னிலை வகித்தாா். கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சி.கிருஷ்ணமுரளி, இலவச தையல் பயிற்சி பெற்ற 60 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில், தையல் நிறுவனச் செயலா் சுப்பிரமணியன், பயிற்சி பள்ளி நிா்வாகி கணேசன், அதிமுக நிா்வாகிகள் ஜெனிபா் கணேசன், பொய்கை மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com