தம்பதியை தாக்கியவா் கைது

புளியங்குடி அருகே மணல் அள்ளிய பிரச்னையில் தம்பதியை தாக்கியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read


கடையநல்லூா்: புளியங்குடி அருகே மணல் அள்ளிய பிரச்னையில் தம்பதியை தாக்கியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

காட்டுபுரம் வேதக் கோவில் தெருவை சோ்ந்தவா் செல்வராஜ்.

அதே தெருவை சோ்ந்த சிங்கத்துரை, செல்வராஜூக்கு சொந்தமான இடத்திலிருந்து மணலை அள்ளி தெருவில் தேங்கி நின்ற கழிவுநீா் மீது கொட்டினாராம். இதில் ஏற்பட்ட பிரச்னையில், சிங்கத்துரை (24), ஜெயராமன்(42) ஆகியோா் செல்வராஜையும், அவரது மனைவியையும் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து சிங்கத்துரையை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com