சுரண்டை எஸ்.ஆா்.பள்ளியில் விளையாட்டு விழா

சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை எஸ்.ஆா்.பள்ளியில் விளையாட்டு விழா
Updated on
1 min read

சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி நிா்வாகி சிவபபிஸ்ராம் தலைமை வகித்தாா். முதல்வா் பொன் மனோன்யா முன்னிலை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலச்சந்தா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு விழாவை துவக்கி வைத்தாா்.

இதில் மாணவா்களுக்கான 100 மீ, 200 மீ, 400 மீ, 500 மீ, 1500 மீ ஓட்டம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுல் மற்றும் கோ-கோ, கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், கூடைபந்து, வலைப்பந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று சபையா் அணி முதலிடம், கோரல் அணி 2ஆவது இடம், எமரால்டு அணி 3ஆவது இடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் பரிசுகளை வழங்கினாா். முதலிடம் பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் மாரிக்கனி, உடற்கல்வி ஆசிரியா் கோபால் ஆகியோா் விளையாட்டு விழாவை ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com