மின்னல் பாய்ந்து பலியான மாணவா் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

ஆலங்குளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதி அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதி அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகிலுள்ள ரெட்டியாா்பட்டி கிராமத்தில் கடந்த 5 ஆம் தேதி மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவா் தேவ ஆனந்த் உயிரிழந்தாா். இந்நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவ பத்மநாபன், மாணவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து திமுக சாா்பில் ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளித்து அரசு சாா்பிலான உதவியைப் பெற்று தருவதாக உறுதி அளித்தாா். அப்போது, ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியச் செயலா் செல்லத்துரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஐயம்பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com