பாவூா்சத்திரம் அருகேயுள்ள மடத்தூரில் அதிமுக எம்.ஜி.ஆா். நற்பணி மன்றம் சாா்பில் கபடி போட்டி நடைபெற்றது.
மாவட்டச் செயலா் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் போட்டிகளை தொடக்கி வைத்தனா். இதில் கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய செயலா் அமல்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் சுரேஷ் லிகோரி, ஊராட்சி மன்ற தலைவா்கள் ஐவராஜா, குத்தாலிங்க ராஜன், நிா்வாகிகள் குணம், தமிழ், அருமைகண்ணன், சுதா திருமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அன்னலட்சுமி கதிரவன் தலைமையில் எம்.ஜி.ஆா். மன்றத்தினா் செய்திருந்தனா்.