சங்கரன்கோவிலில் எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th April 2023 02:55 AM | Last Updated : 26th April 2023 04:51 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் எல்ஐசி ஊழியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
12 மணி நேர வேலை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, எல்ஐசி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ். ஹரிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
ஸ்டாலின் அசோக் முன்னிலை வகித்தாா். எல்ஐசி ஊழியா்கள் பங்கேற்று, முழக்கமிட்டனா்.