கடையநல்லூா் அருகேவிபத்து: 4 போ் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை, காரும் சுமை ஆட்டோவும் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை, காரும் சுமை ஆட்டோவும் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கிவந்த காரும், செங்கோட்டையிலிருந்து கடையநல்லூா் சென்ற சுமை ஆட்டோவும் கடையநல்லூா் அருகே அச்சம்பட்டி பகுதியில் மோதினவாம். இதில், காரில் பயணம் செய்த மதுரை, பாரதியாா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாரின் மனைவி லதாபிரியா (33), மகள் முத்துமீனா (8), சுமை ஆட்டோ ஓட்டுநரான செங்கோட்டை சேகா் (42), புலிப்பாறைப்பட்டி சப்பாணி (45) ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். அவா்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com