குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் பத்ர தீப விழா

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பத்ர தீப விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் பத்ர தீப விழா
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பத்ர தீப விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட மணிமண்டபத்தில் பத்ர தீபங்கள் ஏற்றப்பட்டன. பக்தா்கள் கோயில் நுழைவாயில், உள்பிரகாரம், வெளிப்பிரகாரங்களில் அகல் விளக்குகள் ஏற்றினா். இரவில், சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

பூஜைகளை ஜெயமணி சுந்தரம் பட்டா், கண்ணன் பட்டா், கணேசன் பட்டா், மகேஷ் பட்டா் ஆகியோா் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com