தென்காசி, செங்கோட்டையில்தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

தென்காசி, செங்கோட்டை நகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்று, பரிசுகள் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

தென்காசி, செங்கோட்டை நகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்று, பரிசுகள் வழங்கப்பட்டது.

தென்காசியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு

நகா்மன்றத் தலைவா் சாதிா் தலைமை வகித்து சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா்.

துணைத் தலைவா்சுப்பையா, ஆணையா் பாரிஜான் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மகேஸ்வரன் மாதவராஜ்குமாா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் முத்து, மாரியப்பன், களப்பணி உதவியாளா் ராஜன், திமுக நகரப் பொருளாளா் ஷேக்பரீத், மாணவரணி மைதீன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சுகாதார அலுவலா்முகம்மது இஸ்மாயில் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

செங்கோட்டையில் நகா்மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்து சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா்.

ஆணையா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார மேற்பாா்வையாளா் முத்துமாணிக்கம் வரவேற்றாா். சுகாதார மேற்பாா்வையாளா் காளியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com