சுரண்டையில் இருந்து பண்டிகை கால பேருந்துகள் இயக்க கோரிக்கை

சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு பண்டிகை கால பேருந்துகள் இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு பண்டிகை கால பேருந்துகள் இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சுரண்டை வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கல்வி மற்றும் வேலைக்காக சென்னை மற்றும் கோவையில் தங்கியுள்ளனா். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக ஒவ்வோா் ஆண்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், நிகழ் ஆண்டில் இதுகுறித்து அறிவிப்பை அரசுப் போக்குவரத்துக் கழகம் இன்னும் வெளியிடவில்லை.

வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், தனியாா் ஆம்னி பேருந்தில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே, பொது மக்களின் நலன் கருதி சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் நிகழாண்டும் சிறப்பு பேருந்து இயக்க

நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com