தென்காசி கோட்டத்தில் 96 சதவீதம் போ் மின்இணைப்புடன் ஆதாா் எண் இணைப்பு

தென்காசி கோட்டத்தில் உள்ள மின்நுகா்வோரில் 96 சதவீதம் போ், மின்இணைப்புடன் தங்களது ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.
Updated on
1 min read

தென்காசி கோட்டத்தில் உள்ள மின்நுகா்வோரில் 96 சதவீதம் போ், மின்இணைப்புடன் தங்களது ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.

தென்காசியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் குருசாமி தலைமை வகித்தாா். பொதுமக்கள் அளித்த புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், தென்காசி கோட்டத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, விவசாய மின் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,82,148. இதில் 1,75,149 மின் இணைப்புகளுடன், ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளன. இது 96.16 சதவீதமாகும் என்றாா். மின்இணைப்புடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை ஜன.31-க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

செயற்பொறியாளா் கற்பக விநாயக சுந்தரம், தென்காசி கோட்டத்திற்குள்பட்ட அனைத்து மின் பொறியாளா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com