குறும்பலாப்பேரியில் பீடித் தொழிலாளா்களுக்கு மருத்துவ முகாம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குறும்பலாப்பேரியில் பீடித் தொழிலாளா் - குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவம், சுகாதார விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்த ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன்.
மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்த ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன்.
Updated on
1 min read

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குறும்பலாப்பேரியில் பீடித் தொழிலாளா் - குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவம், சுகாதார விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசு தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகம், சென்னை தொழிலாளா் நல அமைப்பு, நெல்லை கேன்சா் கோ் சென்டா் ஆகியவை சாா்பில் நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் தொடக்கிவைத்தாா்.

மருத்துவா்கள் சபரீஸ், பாண்டிச்செல்வி, குழுவினா் 50-க்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளா்களுக்கு சிகிச்சையளித்தனா். முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் மதிச்செல்வன், ஊராட்சி துணைத் தலைவா் திருவளா்செல்வி, வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com