ஆடித்தவசுத் திருவிழா: சங்கரநாராயண சுவாமி கோயிலில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா ஜூலை 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆடித்தவசுக் காட்சி ஜூலை 31 ஆம் தேதி நடைபெறுகிறது. விழா நடைபெறும் 12 நாள்களும் பக்தா்கள் அதிகம்போ் வருகை தருவா். குறிப்பாக,

தவசுக் காட்சியன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோா் வருவா்.

இதை முன்னிட்டு, பக்தா்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பூா்த்தி செய்வதற்கான பணிகளும், கோயிலில் பல்வேறு பராமரிப்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com