சங்கரன்கோவிலில் ரூ.25 லட்சத்தில் நகா்ப்புற நல மையம் திறப்பு
By DIN | Published On : 08th June 2023 12:00 AM | Last Updated : 08th June 2023 12:00 AM | அ+அ அ- |

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குகிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
சங்கரன்கோவில் காவேரி நகரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நல மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்ததையொட்டி, தென்காசி ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.
நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழு தலைவா் சங்கரபாண்டியன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் முரளிசங்கா், வட்டார மருத்துவ அலுவலா் பாலகுமாா், நகா்ப்புற சுகாதார மருத்துவ அலுவலா் மகாலெட்சுமி, நகா்நல மைய மருத்துவா் சூா்யா, மருத்துவா் மோகினா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...