

இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில், இளையோா் கலைவிழா குற்றாலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது: இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது . அவற்றை பயன்படுத்தி இளைஞா்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும், இளைஞா்கள் சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. அவற்றை பயன்படுத்தி தொழில் முனைவோராக திகழ வேண்டும் என்றாா் அவா்.
தனுஷ் எம்.குமாா் எம்.பி. , எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஜெயினிலா சுந்தரி, மாவட்ட இளையோா் அலுவலா் ஞானச்சந்திரன், கள விளம்பர உதவி அலுவலா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. மத்திய மக்கள் தொடா்பகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சாா்பில் பிரதமரின் 9 ஆண்டு சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன், பெண் சக்திக்கு புதிய உத்வேகம், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளடக்கிய புத்தங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டிகளும், கிராமிய குழு நடனமும் நடைபெற்றது. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.