குற்றாலத்தில் ரூ. 11 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப் பகுதிகளில் ரூ. 11 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைத்த ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன்.
வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைத்த ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப் பகுதிகளில் ரூ. 11 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் பங்கேற்று பணிகளைத் தொடக்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதல்கட்டமாக பேரருவிப் பகுதியில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. ஆண்கள்-பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பறை, தோரணவாயில் புதுப்பித்தல், பாதை சீரமைப்பு, சிறுவா் பூங்கா மேம்பாடு, குற்றாலம் பேரூராட்சி ஆலோசனையுடன் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும். தொடா்ந்து, பிற பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொறியாளா் சீனிவாசன், சுற்றுலா அலுவலா் சீதாராமன், மண்டல சுற்றுலா வளா்ச்சிக் குழு உறுப்பினா் டாக்டா் காா்த்திக் குமாா், குற்றாலம் சிறப்புநிலைப் பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா, சுகாதார அலுவலா் ராஜகணபதி, பொறியாளா் மைதீன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ரா. ராமசுப்பிரமணியன், உதவி சுற்றுலா அலுவலா் சந்திரகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com