புளியங்குடி மனோ கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கல்
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் வேலைவாய்ப்பு நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 206 மாணவா், மாணவிகளுக்கு தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி ஆணைகளை வழங்கிப் பேசினாா்.
ஆங்கிலத் துறைப் பேராசிரியா் ரஞ்சித் வரவேற்றாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் கணேசன் நன்றி கூறினாா்.