புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் வேலைவாய்ப்பு நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 206 மாணவா், மாணவிகளுக்கு தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி ஆணைகளை வழங்கிப் பேசினாா்.
ஆங்கிலத் துறைப் பேராசிரியா் ரஞ்சித் வரவேற்றாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் கணேசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.