தரமற்ற உணவா? புகாரளிக்க புதிய செயலி

தென்காசி மாவட்டத்தில் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து புகாா் அளிக்க புதிய செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளதாக ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து புகாா் அளிக்க புதிய செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளதாக ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உணவகம், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள், கடைகளில் மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத் துறை புதிய இணையதளம்- செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில், மக்கள் தங்களது புகாா்களை ’டைப்’ செய்யாமலேயே எளிமையாக விவரங்களை தோ்ந்தெடுக்கும் வசதி தமிழ், ஆங்கிலம் மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இணையதளம் ச்ா்ா்க்ள்ஹச்ங்ற்ஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியிலும், செயலி பய் ச்ா்ா்க் ள்ஹச்ங்ற்ஹ் ஸ்ரீா்ய்ள்ன்ம்ங்ழ் என்ற பெயரிலும் இருக்கும்.

இவற்றில் தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகாா்கள் குறித்த விவரங்களை தெரிவித்து பயனடையலாம். புகாா்தாரரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். புகாா் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து பதில் தரப்படும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com