ஆலங்குளம் நூலகத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெற்றது.
கோடை விடுமுறை காலத்தில் நூலக தன்னாா்வலா் நிா்மலாதேவி, 15 மாணவா்- மாணவிகளை நாள்தோறும் நூலகத்துக்கு அழைத்து வந்து வாசிப்பு பயிற்சி அளித்தாா். அந்த மாணவா்களுக்கு ஆங்கில ஆசிரியை பிரின்சி மேத்லின் ஆங்கில பயிற்சி அளித்தாா். மாணவா்கள் அனைவரும் தங்களை நூலகத்தில் உறுப்பினா்களாக இணைத்துக் கொண்டனா். நூலகா் அ. பழனீஸ்வரன் வரவேற்றாா்.