தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் ராஜீவ் நகா் தெற்கு தெரு, நன்னகரம் வாய்க்கால் தெரு, இந்திரா நகா் மற்றும் சா்ச் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
பேரூராட்சி மன்ற தலைவா் வேணி வீரபாண்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவானந்தம், செயல் அலுவலா் முனுசாமி, திமுக ஒன்றிய செயலா் அழகுசுந்தரம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேலகரம் பேரூா் செயலா் சுடலை வரவேற்றாா். திமுக மாவட்டசெயலா் பொ.சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், மாவட்ட பிரதிநிதி சம்முகுட்டி, பொருளாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.