கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி காயமடைந்தாா்.
மேலக்கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (42). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் வீட்டினுள்ளும், குடும்பத்தினா் வெளிப்புறத் திண்ணையிலும் தூங்கினராம். கடையநல்லூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், இவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், மாரியப்பன் காயமடைந்தாா்.
தகவலின்பேரில் கடையநல்லூா் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை அதிகாரி ஷேக்அப்துல்லா தலைமையிலான வீரா்கள் சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மாரியப்பனை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். வீட்டை வருவாய்த் துறையினா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.