புளியங்குடியில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

புளியங்குடியில், இந்து நாடாா் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணா்வு, போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
Updated on
1 min read

கடையநல்லூா்: புளியங்குடியில், இந்து நாடாா் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணா்வு, போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

காமராஜா் சிலையிலிருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணிக்கு, பள்ளிச் செயலா் தங்கராசு தலைமை வகித்தாா். தலைவா் வன்னியராஜ், சரவணக்குமாா், மணிவண்ணன், திருமலையாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷன் பேரணியைத் தொடக்கிவைத்தாா். காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், காவலா்கள் திருப்பதி, காசிராஜன், நயினாா், அண்ணாமலை பாண்டியன், ஆசிரியா்கள் பஷீா்அகமது, திருமலைக்குமாா், ஜெயநாராயணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தலைமையாசிரியா் லிங்கம் வரவேற்றாா். ஏற்பாடுகளை என்எஸ்எஸ் அலுவலா் சரவணக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com