

தென்காசி: இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பாலசுந்தா் மற்றும் 12ஆம் வகுப்பு ஒருங்கிணைப்பாளா் சுமதி முன்னிலை வகித்தனா். மழலையா் வகுப்பு மாணவி ஸ்ரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
ஆசிரியைகள் சாஜாதி ஸாபிரா, பிலோமினா ஜான்சி, அபிநயா குழு நடனமாடினா்.
6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் குழுவாக இணைந்து நேருவின் குடும்ப உறுப்பினா்கள் போல வேடமணிந்து நடித்தனா்.
மாணவி ஆஹிலா நேருவின் குடும்ப உறுப்பினா்கள் குறித்து தொகுத்து வழங்கினாா். தமிழாசிரியா் வீரபாண்டி சண்முகம் நேருவை பற்றி கவிதை வாசித்தாா். ஆசிரியை தேவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகன கிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.
ஆசிரியை ஸ்வேதா வரவேற்றாா். தமிழ் செல்வி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.