தென்காசி: அச்சன்புதூா், கீழப்பாவூா் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 22) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அச்சன்புதூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு பகுதிகளிலும், கீழப்பாவூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம் ,கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிபட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்குப் பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.