

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய புள்ளி மான் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை சிவன் கோயில் கிணற்றில் 3 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும், வனத்துறையினரும் அந்த மானை கிணற்றிலிருந்து மீட்டனா். பின்னா், மானுக்கு மாறாந்தை கால்நடை மருத்துவா் ராமசெல்வம் முதலுதவி அளித்தாா். இதையடுத்து, அந்த மான் வனப்பகுதியில் விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.