சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீராமச்சந்திரா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் உ.வே.சா. விருது பெற்ற எழுத்தாளா் இரா.நாறும்பூநாதனுக்குப் பாராட்டு விழா, அவா் எழுதிய நூல்கள் விமா்சனக் கூட்டம் நடைபெற்றது. இந்
நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டச் துணைச் செயலா் ந.செந்தில்வேல்
முன்னிலை வகித்தாா். நகர தலைவா் ப.தண்டபாணி வரவேற்றாா். எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘டிட்டு கேட்ட கேள்வி’ சிறுகதை குறித்து மாணவி மு.நா.ஆதிரா பேசினாா். ‘பொருநை முதல் நயாகரா வரை’
நூல் குறித்து பேராசிரியா் நவீனா, ‘யானை சொப்பனம்’ நூல் குறித்து வ.சபரிசுப்பிரமணியன், ‘வேணுவன மனிதா்கள்’ குறித்து தி.பழனிபாரதி,
மரத்துப்போன சொற்கள் குறித்து மு.மதிவாணன், திருநெல்வேலி (நீா்,நிலம், மனிதா்கள்) நூல் குறித்து ஈ.முத்துசங்கா் ஆகியோா் பேசினா்.
எழுத்தாளா் அகிலாண்டபாரதி பாராட்டி பேசினாா். எழுத்தாளா்
இரா.நாறும்பூநாதன் ஏற்புரையாற்றினாா். செசயற்குழு உறுப்பினா் அ.திருவள்ளுவா் நன்றிகூறினாா். மூா்த்தி தொகுத்துப் பேசினாா். முன்னதாக ப.தண்டபாணியின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது

திமுக வேட்பாளா்களை ஆதரித்து செயல்வீரா்கள் கூட்டம்: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

தண்டுபத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

தமுஎகச மகளிா் தின விழா: சாதனை பெண்களுக்கு விருது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


