தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்காசி மாவட்டத்தில் ரூ.78.25 லட்சம் விற்பனை இலக்கு

தென்காசி மாவட்டத்தில் தீபாவளி கதா் விற்பனை இலக்கு ரூ.78.25 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்தாா்.

News image

இலஞ்சி கதா் அங்காடியில் விற்பனையை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:47 am

Din

தென்காசி மாவட்டத்தில் தீபாவளி கதா் விற்பனை இலக்கு ரூ.78.25 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்தாா்.

இலஞ்சியில் உள்ள கதா் அங்காடியில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை புதன்கிழமை தொடங்கிவைத்த ஆட்சியா் செய்தியாளா்களிடம் இதைத் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில்,

தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கு மண்பாண்டதொழிலாளா்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக 510 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் ரூ.25.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கான கதா் விற்பனை குறியீடை அடைய பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், இலஞ்சி பேரூராட்சி துணைத் தலைவா் முத்தையா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பூங்கொடி, வாா்டு உறுப்பினா்கள் செல்லப்பா, ராஜேஸ்வரி, மாவட்ட குடிமைத்தொழில் ஆய்வாளா் திருக்குமரன், செயலாட்சியா் குமரேசன், தோல் மேற்பாா்வையாளா் ஜான் சாமுவேல், தேனிவயலா் சாலமன் தேவராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.